நல்லகண்ணு கடந்து வந்த பாதை மறைந்தார் நல்லகண்ணு!!


1. *தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் 1925ம் ஆண்டு பிறந்தார் நல்லகண்ணு.*

2. *18 வயதில் இடதுசாரி இயக்கத்தில் சேர்ந்து ஏழை எளிய, தொழிலாளர்கள், விவசாயிகளின் உரிமைக்காக போராடியவர்.*

3. *மகாத்மா காந்தியின் அறைகூவலை ஏற்று வெள்ளையனே  வெளியேறு இயக்கத்தில் பங்கேற்று, மாணவர்களை திரட்டி போராட்டம் நடத்தி சிறை சென்றவர்.*

4. *1992 முதல் 2005 வரை 13 ஆண்டுகால இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளராக இருந்தார்.*

5. *சிறுவயதிலேயே ஆர்வத்துடன் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர். தனது வாழ்நாளின் பெரும் பகுதியைப் போராட்டங்கள் மற்றும் சிறையில் கழித்தவர்.*

6. *விடுதலைப் போராட்டம், விவசாயிகள் போராட்டம், தீண்டாமை எதிர்ப்பு, கனிமவள கொள்ளைக்கு எதிரான பல போராட்டங்களில் ஈடுபட்டவர்*

7. *80 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுவுடமைக்  கொள்கையுடன் பயணித்தவர்.*

8. *உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்ற போராட்டத்தை தமிழ்நாட்டில் முன்னின்று நடத்தியவர்.*

9. *மடங்களின் கட்டுப்பாட்டில் இருந்த நிலங்களின் விவரத்தை தொகுத்து நூலாக வெளியிட்டவர்.*

10. *தனது 80வது பிறந்தநாளையொட்டி கட்சி வசூலித்து 10 கொடுத்த ரூ.1 கோடியை கட்சிக்கே திருப்பிக் கொடுத்தவர்.*

11. *2022ல் தகைசால் தமிழர் விருதுடன் அரசு வழங்கிய 11 ரூ.10 லட்சத்துடன் ரூ.5000-ஐ சேர்த்து முதலமைச்சர் நிவாரண நிதிக்கு திருப்பிக் கொடுத்தவர்.*

12. *நல்லகண்ணுவின் உடல் சென்னை மருத்துவக் கல்லூரிக்கு தானமாக ஒப்படைக்கப்படுகிறது!*

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!