உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் ஞானாம்பிகை கோவில் மாசி மக தேரோட்டம் மார்ச்சில் நடைபெறுவதையொட்டி நடைபெற்ற கொடியேற்றம்!!
தேனி மாவட்டம்.உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோவில் வரலாற்று சிறப்பு பெற்றது. இது ராகு கேது கால சர்ப்ப தோஷ நிவர்த்தி ஸ்தலமாகும். ராகுவும், கேதுவும் தனித் தனி சன்னதிகளில் தம்பதி சகிதமாக எழுந்தருளியுள்ளனர். ஞாயிறு தோறும் ராகு காலத்தில் நடைபெறும் சிறப்பு பூஜைகளில் பங்கேற்க பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வருகின்றனர். இக்கோவிலின் தேரோட்டம் , ஆண்டுதோறும் மாசி மாதம், மாசி மகா தேரோட்டமாக நடைபெறும்.முன்னதாக வாஸ்து சாந்தி, யாகசாலை பூஜை நடைபெற்றது. இவ்விழாவானது இந்து சமய அறநிலையத்துறை சார்பில் முன்னெடுக்கப்படுகிறது கோவில் செயல் அலுவலர் மற்றும் அறங்காவல் துறை நிர்வாகிகள் பக்தர்கள் கலந்து கொண்டனர் .
தேனி மாவட்ட செய்தியாளர் ராஜா.

கருத்துகள்
கருத்துரையிடுக