கலவையில் ஜாதி ரீதியாக செயல்பட்ட ஆசிரியரை வன்கொடுமை சட்டத்தில் கைது செய்யக்கோரி நடைபெற்ற தர்ணா போராட்டம்!!
ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் ஆறாம் வகுப்பு சிறுவனை சாதி ரீதியாக திட்டி அடித்த ஆசிரியர் மீது புகார் அளித்தும் அவர் மீது வன்கொடுமை சட்டத்தில் கைது செய்யப்படவில்லை இதேபோல் பல சம்பவங்கள் ஜாதி ரீதியாக தலித் மக்கள் பிரச்சனைகளை போலீசார் கண்டு கொள்வதில்லை என கோஷமிட்ட வாரு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர் நடவடிக்கை எடுக்க கோரி விடுதலை சிறுத்தை கட்சி சார்பாக ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்100- க்கும் மேற்பட்டோர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமாதானம் செய்து மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களை சந்திக்க வைத்தனர் பின்பு போராட்டக்காரர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து அவரிடம் முறையிட்டனர். இது சம்பந்தமாக நான் எஸ்பி அவர்களிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக கூறினார். போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.
ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.


கருத்துகள்
கருத்துரையிடுக