நத்தம் தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற நத்தம் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் பெருந்திருவிழா!!
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற நத்தம் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவில் மாசி பெருந்திருவிழா இனிதே நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் வருகின்ற 03.03.2026 ஆம் தேதி அன்று சந்திர கிரகணம் நடைபெற இருப்பதால் அன்றைய தினம் நத்தம் ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் மதியம் ஒரு மணியிலிருந்து மாலை 7 மணி வரை கோவில் நடை சாத்தப்படுகின்றது என்பதனை பக்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் தெரியப்படுத்திக் கொள்கிறோம்.
அன்றைய தினம் 7 மணிக்கு மேல் சாமி தரிசனமும், அதன் தொடர்ச்சியாக இரவு 11 மணிக்கு மேல் சிம்ம வாகனத்தில் அம்பாள் மின்னொளி ரதத்தில் நகர்வலம் வருகிறது. என்பதை தெரியப்படுத்திக் கொள்கிறோம். இப்படிக்கு கோவில், செயல் அலுவலர் பால சரவணன் மற்றும் பரம்பரை அறங்காவலர் பூசாரிகள் கணேஷ், சின்ராஜ், கோபாலகிருஷ்ணன், கிருஷ்ணமூர்த்தி, சுரேஷ், யுவராஜ், தினேஷ்குமார், முத்துக்குமார், புருஷோத்தமன், திருக்கோவில் நிர்வாகம்.
திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் நத்தம் மதுரை வீரன்

கருத்துகள்
கருத்துரையிடுக