தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சூழலில், பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக இன்று (பிப். 28) இரவு தமிழகம் வருகிறார். ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலப் பயணங்களை முடித்துக் கொண்டு, இன்று இரவு 9 மணியளவில் தனி விமானம் மூலம் சென்னை வரும் அவருக்கு, சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. பின்னர் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தங்கும் அவர், நாளை (மார்ச் 1) காலை 11.45 மணியளவில் புதுச்சேரி சென்று ரூ. 2,700 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார். அதனைத் தொடர்ந்து மதியம் 3 மணியளவில் மதுரை வரும் பிரதமர், ரூ. 4,400 கோடி மதிப்பிலான உட்கட்டமைப்புத் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிப்பதோடு, திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்கிறார். தேர்தல் நெருங்கும் வேளையில் பிரதமரின் இந்த வருகை அரசியல் வட்டாரத்தில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக