குடியாத்தம் . தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பாக கருப்பு பேட்ச் . அணிந்து காத்திருப்பு போராட்டம்!!
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று காலை தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பாக கருப்பு பேட்ச் அணிந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிகழ்ச்சிக்கு வட்டத் தலைவர் வி கோகுல். தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்கள். மாநிலத் துணைத் தலைவர் கோ துரைராஜ், மாவட்டத் துணைத் தலைவர் எம் வீர மணிகண்டன். மாநில செயற்குழு உறுப்பினர் எஸ் வினோத் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த காத்திருப்பு போராட்டத்தில் . ஆண் பெண் உள்ளிட்ட 43 கிராம உதவியாளர்கள் பங்கேற்றனர். இறுதியில் வட்ட பொருளாளர் சரத்குமார் நன்றி கூறினார்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்

கருத்துகள்
கருத்துரையிடுக