மதுரை : ஜெ.ஏ.எம் மகளிர் அரபிக் கல்லூரி சார்பாக நடைபெற்ற மஹபுப் பாளையம் கல்லூரி வளாகத்தில் - லஜ்னதுல் ஹுதா மாணவிகள் சொற் பயிற்சி மன்றம் நிறைவு விழா!!
மதுரை : ஜெ.ஏ.எம் மகளிர் அரபிக் கல்லூரி சார்பாக மஹபுப் பாளையம் கல்லூரி வளாகத்தில் - லஜ்னதுல் ஹுதா மாணவிகள் சொற் பயிற்சி மன்றம் நிறைவு விழா, கல்லூரி இணையதளம் (வெப்சைட்) துவக்க விழா மற்றும் பரிசளிப்பு விழா என முப்பெரும் விழா மிகச் சிறப்பான முறையில் நடைபெற்றது விழாவிற்கு கல்லூரியின் நிறுவனர் பள்ளப்பட்டி மௌலானா மௌலவி முஹம்மது அல்தாப் அலி உலவி அவர்கள் தலைமையேற்றார் நமது கல்லூரியின் தலைமை ஆசிரியை ஆலிமா அஃப்லலுல் உலமா சுமைய்யா பானூ வரவேற்புரையாற்றினார் சிறப்பு விருந்தினராக திண்டுக்கல் அல்ஷிஃபா மாற்றுத்திறனாளிகள் ஆதரவற்றோர் மதரஸாவின் முதல்வர் மௌலானா மௌலவி ஷுஜா அஹமது ஸஅதி பாஜில் மன்பஈ அவர்களும், தமிழ்நாடு ஜமாத்துல் உலமா சபையின் மதுரை மாவட்ட செயலாளர். மௌலானா மௌலவி முஹம்மது இப்ராஹிம் ஸஅதி பாஜில் மழாஹிரி , ஆலிமா சுரையா பானூ அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இதில் மாணவிகளின் பேச்சுப் போட்டியும் உரையாடல் போட்டியும் நடைபெற்றது. ஒரு வருடம் முழுக்க விடுப்பு எடுக்காமல் வருகை தந்த மாணவிகளுக்கு முதல் பரிசாக சைக்கிளும் இரண்டாம் பரிசாக மிக்சியும் வழங்கப்பட்டது நிகழ்ச்சியில் 100 க்கும் மேற்பட்ட மாணவிகளும் பெற்றோர்களும் கலந்து கொண்டார்கள்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.


கருத்துகள்
கருத்துரையிடுக