ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.188.48 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள எட்டு வகுப்பறைகளை தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக திறப்பு!!
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.188.48 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது எட்டு வகுப்பறைகளை காணொளி காட்சி வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்டக் முதன்மை கல்வி அலுவலர் சண்முகம் பேரூராட்சி தலைவர் ராசி முருகானந்தம் திருவரங்குளம் மேற்கு ஒன்றிய செயலாளர் தங்கமணி ஆகியோர் குத்துவிளக்கு எண்ணிக்கை சிறப்பித்தனர், முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியர் தியாகராஜ், அனைவரையும் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் நகர செயலாளர் பழனிக்குமார், கவுன்சிலர்கள் கிருஷ்ணமூர்த்தி, ஆறுமுகம், இப்ராஹிம், காங்கிரஸ் வட்டார தலைவர். அரங்குளவன், அதிமுக மாணவரணி துணைச்செயலாளர் ரெங்கநாதன், அரசு ஒப்பந்தக்காரர் கணேசன், ஓபிசி ரமேஷ், வெங்கடேசன் ஆசிரியர், எஸ் எம் சி தலைவர் சிதிரா, மற்றும் உறுப்பினர்கள், பெற்றோர்கள், கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்


கருத்துகள்
கருத்துரையிடுக