எம்.ஆர்.எப் நிதி ரூ.1 கோடியில் புதிய அரசு பள்ளி கட்டிடம் மாவட்ட ஆட்சியர் திறந்தார்!!
அரக்கோணம் ஊராட்சி ஒன்றியம் இச்சிப்புத்தூர் ஊராட்சியில் எம் ஆர் எப் நிறுவனத்தின் சி எஸ்ஆர் நிதி ரூ 1.05கோடி மதிப்பில் புதிய அரசு பள்ளிக் கட்டிடம் கட்டப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது விழாவிற்கு எம்ஆர்எப் பொது மேலாளர்.ஜான் டேனியல் தலைமை தாங்கினார் தலைமை ஆசிரியர் தேன்மொழி வரவேற்றார்.
இச்சிப்புத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர்.பத்மநாபன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக .மாவட்ட ஆட்சியர் ஜெ.யு.சந்திரகலா கலந்து கொண்டு கட்டிடத்தை திறந்து வைத்தார் நிகழ்ச்சியில் , மாவட்ட ஊரசு வளர்ச்சி திட்ட இயக்குனர் சரண்யா தேவி, ஊராட்சி மன்ற துணை தலைவர். முனியம்மாள் சீனிவாசன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள். மலா சஸ்வந்த்ரான் ஜெயலட்சுமி விஜயகுமார். மல்லிகா பொன்னுசாமி, .சுமதி சீனிவாசன், நாகராஜன், .சந்திரசேகரன், வெங்கடேசன் உட்பட பள்ளி ஆசிரியர்கள் பொதுமக்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர். எம்ஆர்எப் மக்கட் தொடர்பு அலுவலர் கஜேந்திரன் நன்றி கூறினார்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி

கருத்துகள்
கருத்துரையிடுக