நாளை (01-03-26) மதுரையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகை தரும் பாரத பிரதமர் மோடி அவர்கள் மதுரை AIIMS மருத்துவமனையை திறந்து வைக்கவுள்ளார்.
இந்த மருத்துவமனை பணிகள் குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்மறையான விமர்சனங்களை வைத்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாஜக மாநில மகளிரணி தலைவி கவிதா ஸ்ரீகாந்த் மற்றும் நிர்வாகிகள் ஒரு வித்தியாசமான சுவரொட்டிகளை அறந்தாங்கி நகரமெங்கும் ஒட்டியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்


கருத்துகள்
கருத்துரையிடுக