மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம்!!
தமிழ்மொழித் தியாகிகள் நினைவு நாளை முன்னிட்டு சென்னை மூலக்கொத்தளத்தில் அமைந்துள்ள மொழிப்போர்த் தியாகிகள் தாளமுத்து - நடராசன் நினைவிடத்தில் முதலமைச்சர். மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர். உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மலர் தூவி மரியாதை!
"இந்திக்கு இங்கே இடமில்லை"
"அன்றும் இன்றும் என்றும் இந்திக்கு இங்கே இடமில்லை!, மொழியை உயிராய் நேசிக்கும் ஒரு மாநிலம் தமிழ்நாடு
இனி ஒரு உயிரும் போகாது, நம் தமிழுணர்வு சாகாது; இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம்"
- மொழிப்போர் வீரவணக்க நாளில் முதல்வர் எக்ஸ் தளத்தில் பதிவு.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக