ஆற்காடு அருகே திமிரி தேர்வுநிலை பேரூராட்சி பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகள் நின்று செல்ல வேண்டி பொதுமக்கள் சாலை மறியல்!!
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு வட்டம், திமிரி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் நேரு பஜாரில் அமைந்துள்ள புதிய பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நிறுத்தம் செய்ய வேண்டும் என கோரிக்கை வலியுறுத்தி 200க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் ஆற்காடு வட்டாட்சியர், காவல்துறையினர், பேச்சுவார்த்தை நடத்தினர்.உடன் மண்டல துணை வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர், பேரூராட்சி செயல் அலுவலர், திமிரி காவல் துறையினர் ஆகியோர் உடன் இருந்தனர்.
ஆற்காடு செய்தியாளர் அன்பழகன்.


கருத்துகள்
கருத்துரையிடுக