கிணற்றில் விழுந்த குட்டி கேளை ஆட்டை காப்பாற்றிய தீயணைப்புத் துறையினர்!!
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா கடமலைக்குண்டு அருகே உள்ள விவசாய கிணற்றில் தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த குட்டி கேளையாட்டை பொதுமக்கள் கண்டறிந்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர் விரைந்து வந்த கடமலைக்குண்டு தீயணைப்பு துறையினர் வலை விரித்து தேடினர் கிடைக்காததால் கிணற்றுக்குள் இறங்கி தேட ஆரம்பித்தனர்.
வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி போராடி ஆட்டை பத்திரமாக மீட்டனர் காயமின்றி மீட்கப்பட்ட கேளையாடு பின்னர் வனப்பகுதிக்குள் விடப்பட்டது.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி


கருத்துகள்
கருத்துரையிடுக