நத்தம் காவல் நிலையத்தில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழா!!
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் காவல் நிலையத்தில் ஆய்வாளர். பொன்.குணசேகரன் தலைமையில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
காவலா்கள் அனைவரும் ஒரே மாதிரியாக பாரம்பரியமான வேஷ்டி சட்டை அணிந்தும், பெண் காவலா்கள் சேலை அணிந்தும் கரும்பு, மஞ்சள் கொத்து வைத்து அலங்ரிக்கப்பட்ட பொங்கல் பானையில் பொங்கல் வைத்து குலவை சத்தமிட்டு பொங்கலை கொண்டாடி மகிழ்ந்தனா்.
தொடா்ந்து ஒருவருக்கு ஒருவா் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டு தங்கள் மகிழ்ச்சியைவெளிப்படுத்தினா். இந்த சமத்துவ பொங்கல் விழாவில் சார்பு ஆய்வாளர்கள் அருண்நாராயணன், கிருஷ்ணகுமார் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் நத்தம் மதுரை வீரன்.

கருத்துகள்
கருத்துரையிடுக