நத்தத்தில் மார்கழி மாத தேய்பிறை அஷ்டமி வழிபாடு!!
திண்டுக்கல் மாவட்டம்,தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் செண்பகவல்லி திருக்கோயிலில் தனி சன்னதியில் கால பைரவருக்கு அபிஷேகம் பால், பழம்,இளநீர்,சந்தனம், ஜவ்வாது, மஞ்சள், தேன் போன்ற 16 வகை அபிஷேகப் பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது முன்னதாக
மூலவர் கைலாசநாதர் செண்பகவல்லி தாயாருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது இதில்
திரளான பக்தர்கள் கலந்து கொண்டு விளக்கேற்றி வழிபட்டனர்.
இதே போல் கோபால்பட்டி கபாலீஸ்வரர் கோயிலில் அமைந்துள்ள ஆகாச சொர்ணபைரவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் நத்தம் மதுரை வீரன்.

கருத்துகள்
கருத்துரையிடுக