சிறப்பு காவல் படை வீரர் உலக சாதனை!!
தேனி மாவட்டம், கூடலூர் பகுதியைச் சேர்ந்த ஜி. சிவசங்கர பாண்டியன் என்பவர் தமிழ்நாடு சிறப்பு காவல் படை – எட்டாம் அணி, புதுடெல்லியில் பணியாற்றி வருகிறார்.
இவர், 07.09.2025 அன்று தேனி மாவட்டம், கூடலூர் N.S.K. பொன்னையா கவுண்டர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சாதனை முயற்சியில் ஒவ்வொரு காலிலும் 500 கிராம் மணல் பையை இணைத்து, ஒரு நிமிடத்தில் 192 ஜாகர் ஸ்கிப்ஸ் செய்து சாதனையை நிகழ்த்தினார்.
இந்த சிறப்பான உலக சாதனையைப் பாராட்டி தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர். Dr.B.சினேஹாப்ரியா ,இ.கா.ப., அவர்களை நேரில் சந்தித்து, அவரது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் பெற்றார்.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்
கருத்துரையிடுக