மூன்றானது பாமக!!
பாட்டாளி மக்கள் கட்சியின்; முன்னாள் வன்னியர் சங்க தலைவர். காடுவெட்டி குருவின் மகள் விருதாம்பிகை "ஜெ.குரு பாட்டாளி மக்கள் கட்சி" என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கினார்.
சேலம் மாவட்டம், ஓமலூரில் விருதாம்பிகை கட்சியின் பெயர் மற்றும் கொடியை அறிமுகப்படுத்தினார்.
பாட்டாளி மக்கள் கட்சி ஏற்கனவே ராமதாஸ், அன்புமணி தரப்பு என இரு அணிகளாக செயல்பட்டு வரும் நிலையில் மூன்றாவதாக ஜெ.குரு பாட்டாளி மக்கள் கட்சி துவங்கப்பட்டுள்ளது.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக