போதைப் பொருட்களுக்கு எதிராக போலீசார் பிரச்சாரம்!!
திருமயம் அருகே உள்ள இருதயபுரம் கிறிஸ்துராஜா உயர்நிலைப் பள்ளியில் திருமயம் காவல்துறை அலுவலர்கள் பங்கேற்று போதை பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு தகவல்களை தெரிவித்தனர். அவர்கள் மேலும், பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினர். முதலில் தலைமையாசிரியர். குயிண்டன் வரவேற்றார். இதில் மாணவ, மாணவியர் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்

கருத்துகள்
கருத்துரையிடுக