பருவம் தவறிய மழையால் நெற்பயிர்கள் நாசம்!!
தற்பொழுது பெய்து வருகின்ற பருவம் தவறிய மழையினால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் தண்ணீரில் மூழ்கி மிகப்பெரும் பாதிப்பை மகசூல் இழப்பை விவசாயிகளுக்கு ஏற்படுத்தி உள்ளது ஆவுடையார் கோயில் தாலுகா மற்றும் அறந்தாங்கி தாலுகா பெருநாவலூர் வீரமங்கலம் போன்ற கிராமங்களில் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வயல்வெளியை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய நிவாரணத்தை அரசிடம் இருந்து பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டிய பாதிக்கப்பட்ட விவசாயிகள் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்


கருத்துகள்
கருத்துரையிடுக