திருக்களம்பூரில் கிராம மக்களோடு மாட்டுப் பொங்கல் திருநாளை கொண்டாடி மகிழ்ந்த பி.கே. வைரமுத்து!!
புதுக்கோட்டைமாவட்டம்,பொன்னமராவதி
ஒன்றியம்,திருக்களம்பூரில்
உழவர்களுக்கு உறுதுணையாய், உற்ற நண்பனாய் விளங்கும் கால்நடைகளை போற்றி கொண்டாடும் மாட்டுப் பொங்கல் திருநாளில் புதுக்கோட்டை தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர், முன்னாள் வாரியத் தலைவர். பி.கே.வைரமுத்து,தொழில்அதிபர். வை.குமாரசாமி மற்றும் நிர்வாகிகள் கிராம மக்களோடு மாட்டுப் பொங்கல் திருநாளை கொண்டாடி மகிழ்ந்தனர். கோயில் காளைக்கு கிராம மக்கள் சார்பில் மாலை அணிவித்து கழுத்தில் வேஷ்டி கட்டி சந்தனம்,குங்கும்ம் வைத்து கோயிலைச்சுற்றி அழைத்துவந்தனர்.
புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்
கருத்துரையிடுக