குடிபோதையில் மனைவியை அடித்து துன்புறுத்தியதால் இரண்டு குழந்தைகளுடன் மனைவி கிணற்றில் குதித்து தற்கொலை!!
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே மலை கிராமத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் மது குடிக்கும் பழக்கத்தில் ஈடுபட்டு தினமும் குடித்துவிட்டு வீட்டில் மனைவியை அடித்து சித்திரவதை செய்ததால் மனமுடைந்து அவரது மனைவி தனலட்சுமி இரண்டு குழந்தைகளுடன் விவசாய கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார் தகவல் அறிந்த வருசநாடு காவல்துறையினர் தீயணைப்பு துறையினர் உதவியோடு மூவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர் மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி மாவட்டம் சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி

கருத்துகள்
கருத்துரையிடுக