நெமிலி அருகே பொங்கல் பரிசு தொகுப்பு! வழங்கினார் ஒன்றிய செயலாளர் எஸ்.ஜி.சி பெருமாள்!!
ராணிப்பேட்டை மாவட்டம், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கினங்க, மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சரும், கழக இளைஞர் அணி செயலாளருமான. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் ஆலோசனைப்படி, மாண்புமிகு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்களின் வழிகாட்டுதலின்படி,மாநில சுற்று சூழல் அணி துணைச் செயலாளர் ஆர். வினோத்காந்தி அவர்களின் அறிவுறுத்தலின் பேரில்,
நெமிலி மத்திய ஒன்றியத்திற்கு உட்பட்ட சயனபுரம், பரமேஸ்வரமங்களம், செல்வமந்தை, மேல்களத்தூர் ஊராட்சி நியாய விலைக் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வேட்டி,சேலை, அரிசி,கரும்பு, சர்க்கரை மற்றும் ரூ 3000 நெமிலி மத்திய ஒன்றிய கழக செயலாளர் எஸ்.ஜி.சி பெருமாள் அவர்கள் தலைமையில் வழங்கப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர். சுந்தராம்பாள் பெருமாள் அவர்கள் கலந்து கொண்டு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கினார்.
இதில் ஊராட்சி மன்றத் தலைவர்கள். A.ஆறுமுகம், V..சசிகலா வெங்கடேசன், N.சங்கர், வங்கி செயலாளர்கள். குணசேகரன், அன்பு, ரவிச்சந்திரன், ஒன்றிய கழக துணைச் செயலாளர்கள். A.சீனிவாசன், வழக்கறிஞர் எம்.தமின்அன்சாரி, மாவட்ட பிரதிநிதி. K.சுரேஷ், கிளை நிர்வாகிகள் S. E. B. சேட்டு, R.எல்லப்பன், M.மணிகண்டன், S.மணி, பார்த்தீபன், கழக முன்னோடிகள், பொதுமக்கள் இதில் கலந்துக் கொண்டனர்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி



கருத்துகள்
கருத்துரையிடுக