கண்டக்டருடன் கட்டி புரண்டு சண்டை போட்ட போதை ஆசாமி!!
கோவை காந்திபுரத்தில் இருந்து தடம் எண் 90 அரசு சொகுசு பஸ் சோமனூருக்கு புறப்பட்டது. அப்போது மதுபோதையில் ஒரு பயணி ஏறியுள்ளார். பஸ் லட்சுமி மில் பகுதியைத் தாண்டியபோது, பஸ் ஸ்டாப் இல்லாத இடத்தில் இறங்க வேண்டும் என அவர் அடம்பிடித்திருக்கிறார்.
இது சொகுசு பஸ்; நீங்க கேட்கற இடத்தில் எல்லாம் நிறுத்த முடியாது என கண்டக்டர் கறாராக சொல்லியுள்ளார். ஆத்திரமடைந்த அந்த நபர், கண்டக்டரை தகாத வார்த்தைகளால் திட்டி ரகளை செய்து இருவரும் ரோட்டில் இறங்கி வாக்குவாதம் அதிகரித்து கட்டிப்பிடித்து உருண்டனர். டிராபிக் ஜாம் ஆனது. போலீசார் விரைந்து சென்று போதை ஆசாமியை போலீஸ் நிலையத்துக்கு தூக்கி சென்றனர்.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி


கருத்துகள்
கருத்துரையிடுக