திட்டக்குடி: ம. பொடையூர் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழா!!
கடலூர் மாவட்டம், திட்டக்குடி அடுத்த ம. பொடையூர் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் பெற்றோர்–ஆசிரியர் கழக தலைவர். பொடையூர் சக்திவேல் தலைமையில் சமத்துவ பொங்கல் விழா மற்றும் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சியில் தலைமையாசிரியர். சிவராஜ், எஸ்.எம்.சி. தலைவி சங்கிதா காமராஜ், விசிக மா.இ.செ. காசிகணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவர்களை ஊக்குவித்தனர். ஆசிரியர்கள், பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குமார்.


கருத்துகள்
கருத்துரையிடுக