முகப்பில் பெயர் பலகை இல்லாத நெமிலி பேருந்து நிலையம்!!
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி (Nemili) பகுதியில் உள்ள முக்கிய பேருந்து நிறுத்தம், நெமிலி பேருந்து நிலையம். சேந்தமங்கலம், பானாவரம் மற்றும் மேலேரி போன்ற பகுதிகளுடன் இணைந்த போக்குவரத்து மையமாக உள்ளது. இது சென்னை, அரக்கோணம், ஸ்ரீபெரும்புத்தூர், காஞ்சிபுரம் மற்றும் காவேரிப்பாக்கம் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்குச் செல்லும் பேருந்துகளுக்கான ஒரு முக்கிய போக்குவரத்துப் புள்ளியாகச் செயல்படுகிறது.
இராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமான நெமிலியில் உள்ள பேருந்து நிலையம் முக்கிய போக்குவரத்து மையமாக செயல்படுகிறது. இது சோளிங்கர், அரக்கோணம் மற்றும் ராணிப்பேட்டை நகரங்களுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது, மேலும் நெமிலி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு அருகில் அமைந்துள்ளதால், இப்பகுதியின் அன்றாட பயணத் தேவைகளுக்கு இந்த பேருந்து நிலையம் பெரிதும் பயன்படுகிறது. நெமிலி பேருந்து நிலையம் -முக்கிய தகவல்கள்:
அமைவிடம்: இராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி.
நிர்வாகம்: நெமிலி பேரூராட்சி மற்றும் தாலுக்கா.
இணைப்புகள்: அருகிலுள்ள அரக்கோணம், சோளிங்கர், மற்றும் சுற்றியுள்ள கிராமங்களுக்குச் செல்ல பேருந்து வசதிகள் உள்ளன.
பயன்பாடு: தினசரி பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் ஊழியர்களின் போக்குவரத்திற்குப் பயன்படுகிறது.
வசதிகள்: சிறிய அளவிலான கடைகள் மற்றும் அடிப்படை நிழற்கூரை வசதிகள் உள்ளன. நெமிலி, ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி மற்றும் பொன்னியம்மன் கோயிலுக்குப் பிரபலமானது, இந்த பேருந்து நிலையம் மூலம் பக்தர்கள் எளிதாகப் பகுதிக்கு வந்து செல்ல முடியும்.
குறைகள்:
நெமிலி பேருந்து நிலையம்:
1.முகப்பில் பெயர் பலகை இல்லை.
2.இருக்கைகள் சேதாரம்.
3.வழிப்போக்கர்கள் இரவில் பேருந்து நிலையத்தில் படுத்து உறங்குகின்றனர்.
4.பேரூராட்சி நிர்வாகம் அங்கு சரியாக சுத்தம் செய்வதில்லை.
5.குடிநீர் வசதி இல்லை.
6.பேருந்து நிலையத்தின் முன் பயணிகளுக்கு இடையூறாக கடைகள் உள்ளது.
பொதுமக்கள் மற்றும் பயணிகளின் நான் கருதி சம்பந்தப்பட்ட நிர்வாகம் இதை சரி செய்ய வேண்டும் என பயணிகள் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி.



கருத்துகள்
கருத்துரையிடுக