நத்தத்தில் முகவர்கள் படிவம் வழங்கிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்!!
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் தொகுதி அளவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வருகிற சட்டமன்ற தேர்தலுக்காக வாக்குச்சாவடி முகவர்கள் படிவம் கொடுக்கப்பட்டு அவற்றை பூர்த்தி செய்யும் பணி நடந்து முடிந்ததை தொடர்ந்து பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் நத்தம் வட்டாட்சியர். பாண்டியராஜன் அவர்களிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர். ஜி.ராணி தலைமையில் வழங்கப்பட்டது.இதில் மண்டல துணை தாசில்தார் சுந்தரபாண்டியன், நத்தம் ஒன்றிய செயலாளர். பொன். குழந்தைவேல், சாணார்பட்டி ஒன்றிய செயலாளர். வெள்ளைக்கண்ணன், மாவட்ட குழு உறுப்பினர். சின்னக் கருப்பன், கிளை செயலாளர். பாலமுருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் நத்தம் மதுரை வீரன்.

கருத்துகள்
கருத்துரையிடுக