திட்டக்குடியில் இந்து அறநிலையத்துறை ஆய்வாளர் அலுவலகம் – முதலமைச்சர் காணொலி மூலம் திறப்பு!!
கடலூர் மாவட்டம், திட்டக்குடியில், இந்து அறநிலையத்துறை சார்பில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட ஆய்வாளர் அலுவலகக் கட்டிடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆய்வாளர் தமிழ்ச்செல்வி, செயல் அலுவலர் சிவப்பிரகாசம், அறங்காவலர் குழுத் தலைவர் செந்தில்குமார் மற்றும் அறங்காவலர்கள் ஜோதிமணி, சண்முகம், சக்திவேல், ஜெயா ஆகியோர் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி, இனிப்புகள் வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் துறை அதிகாரிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குமார்.

கருத்துகள்
கருத்துரையிடுக