காட்பாடி அருகே கிராமசபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவரிடம் கணக்கு வழக்கு கேட்டதால் வாக்குவாதம் ! தள்ளு முள்ளு!!
வேலூர் மாவட்டம், காட்பாடி அருகே கரிகிரி ஊராட்சித் தலைவர் அவர்களிடம் கிராம சபா கூட்டத்தில் கணக்கு வழக்கு கேள்வி எழுப்பியதால் அங்கிருந்து நழுவி சென்ற ஊராட்சித் தலைவர். இதனால் இரு பிரிவினருக்கு வாக்குவாதம் தள்ளு முள்ளு அங்கு வந்த பிரம்மாபுரம் காவல் துறையினர் இரு தரப்பினரிடம் பேசி சமாதானம் படுத்தி அனுப்பினர். இதனால் பரபரப்பு வேலூர் மாவட்டம், காட்பாடி அருகே கரிகிரி ஊராட்சியில் ஊராட்சித் தலைவர். தேவராஜ் பலமுறை கேடுகளை செய்து சுமார் 80 லட்சத்திற்கு மேல் கையாடல் செய்துள்ளதாக கரிகிரி ஊராட்சித் துணைத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பலர் இன்று கிராம சபையில் ஆதாரங்களுடன் கேள்வி எழுப் பினார் இதனால் ஊராட்சித் தலைவர் அதர்வாளர்கள் வார்டு உறுப்பினர்களும் இடையே வாக்குவாதங்கள் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த பிரம்மபுர காவல்துறையினர் இரு தரப்பினரிடம் பேசி சமாதானப்படுத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு. பாக்கியராஜ்.

கருத்துகள்
கருத்துரையிடுக