மதுரை : நின்றிருந்த ஆம்னி பேருந்து மீது பின்னால் வந்த பேருந்து மோதி விபத்து . மூன்று பேர் உயிரிழப்பு!!
மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி அருகே பள்ளபட்டி நான்கு வழி சாலையில் நின்றிருந்த சொகுசு பேருந்து மீது பின்னால் வந்த இன்னொரு சொகுசு பேருந்து மோதி விபத்து .
இதில் செங்கல்பட்டை சேர்ந்த சுதர்சன் (23), தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியை சேர்ந்த கனகரத்தினம் (65) மற்றும் திவ்யா(43) என்ற பெண் உட்பட மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
15-க்கும் மேற்பட்டோர் சிறு காயங்களுடன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதி.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.


கருத்துகள்
கருத்துரையிடுக