ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ஜெ.யு. சந்திரகலா, இ.ஆ.ப., அவர்கள் சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள்!!
ர்தமிழ்நாடு முழுவதும் தேசிய சாலைப்பாதுகாப்பு மாதம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ஜெ.யு. சந்திரகலா, இ.ஆ.ப., அவர்கள் வாட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலிருந்து இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் கட்டாயம் அணிய வேண்டி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட்டிணை அணிவித்தும், துண்டு பிரசுரங்களை வழங்கியும், காவலர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்ற இரண்டு சக்கர வாகன பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள்
தொடர்ந்து, நான்கு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் கட்டாயம் இருக்கை பட்டை (Seat Belt) அணிவதை விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கார் விழிப்புணர்வு பேரணியை கொடியை சேர்த்து துவகஇந்நிழ்ச்சியில் இருசக்கர வாகன ஒட்டிகளுக்கு இலவசமாக தலைக்கவசம் வழங்கப்பட்டது. இப்பேரணியானது விழிப்புணர்வு வாசக பதாகைகளுடன் முத்துக்கடை பேருந்து நிறுத்தம் வரை சென்றது.
பின்னர், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பாக சாலை பாதுகாப்பு குறித்த விதிமுறைகள் காட்சிப்படுத்தப்பட்ட விழிப்புணர்வு பேருந்தினை திறந்து வைத்து பார்வையிட்டார்கள். இப்பேருந்து இன்று முதல் ஒரு வாரம் வரையில் பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் நிறுத்தப்பட்டு சாலை விதிகள் குறித்து பொதுமக்களுக்குஇந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குணசேகரன், வட்டார போக்குவரத்து அலுவலர் திரு.மோகன், வட்டாட்சியர் .ஆனந்தன், துணை காவல் கண்காணிப்பாளர் .இமயவர்மன், போக்குவரத்து ஆய்வாளர்கள் செங்குட்டுவேல், முத்துக்குமார், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஆற்காடு கிளை மேலாளர் கருணாகரன், மாவட்ட ஓட்டுநர் பயிற்சி பள்ளிப் பள்ளி உரிமையாளர்கள், இரு சக்கர வாகன விற்பனை முகவர்கள், பொதுமக்கள் மற்றும் சாலைப் பாதுகாப்பு தன்னார்வளர்கள், இராணிப்பேட்டை மாவட்ட காவல் துறையினர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.


கருத்துகள்
கருத்துரையிடுக