ஆற்காடு அதிமுக சார்பில் திருவள்ளுவர் தினம் அனுசரிப்பு!!
ராணிப்பேட்டை மாவட்டம்,ஆற்காடு நகர அதிமுக சார்பில், திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு பஜார் வீதியில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
இந்த நிகழ்விற்கு ஆற்காடு நகர கழகச் செயலாளர் ஜிம் சங்கர் தலைமை தாங்கினார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் எஸ்.எம். சுகுமார் கலந்து கொண்டு, திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
மேலும், இந்த நிகழ்வில் நகர கழகப் பொறுப்பாளர்கள் மற்றும் கழக உடன்பிறப்புகள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
ஆற்காடு செய்தியாளர் ஆனந்த்.

கருத்துகள்
கருத்துரையிடுக