புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபயிற்சி சங்கத்தினர் நடத்திய புத்தாண்டு திருவிழா!!
புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபயிற்சி சங்கத்தினர் காலை, மாலை இரு வேளையும் நடைபயற்சி மேற்கொண்டு வருகின்றனர்
நடைபயற்சியாளர்கள் புத்தாண்டை சிறப்பாக கொண்டாடினர். நடை பயிற்சி மேற்கொணட அனைவரும் இணைந்து புத்தாண்டு தினத்தை கொண்டாடிய நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக அமைந்திருந்தது. நடைபயிற்சி மேற்கொள்ளும் பெஸ்ட் வாக்கர்ஸ் சங்கத்தின் தலைவர் பக்கிரிசாமி தலைமையில்,முக்கிய பிரமுகர்கள் மற்றும் சங்க நிர்வாகிகள் தொழில் அதிபர்அரவிந்த், டாக்டர் ராமமூர்த்தி, முன்னாள் வங்கி அதிகாரி மத்தியாஸ், சீனியர் வக்கில் ராதாகிருஷ்ணன், முன்னாள் வார்டன் சண்முகம், முன்னாள் வங்கி அதிகாரி ஜெயக்குமார், தொழில் அதிபர் சி.என்.ஆர் என்ற சி.நடராசன், முன்னாள் வங்கி அதிகாரி அன்பழகன், விஸ்வநாதன், தியாகராசன், ஜஹாங்கீர், சத்தியமங்கலம் மேலுர் ரவி, பாலாஜி, பாண்டியராசன், மாயழகு, சாரதா விஸ்வநாதன், கனகம்மன் பாபு தம்பி ராஜா,ரியல் எஸ்டேட் பாண்டியன், முன்னாள் போக்குவரத்து தொழிலாளி ராமமூர்த்தி, முன்னாள் தொழில் அதிபர்வாங்க வாங்க ரவி, பொறியாளர் சம்பத், உள்ளிட்ட குழுவினர் நடைபயற்சி மைதானத்தில் அனைவருக்கும் கேக் வழங்கினர். அனைவர் வாழ்விலும் மங்கலம் பெருகிட வேண்டி ரோஜா மலர்கள் வழங்கப்பட்டன.
புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.



கருத்துகள்
கருத்துரையிடுக