வாணியம்பாடி அருகே மூதாட்டி கழுத்தை நெரித்து கொலை செய்து 4 சவரன் நகைகளை கொள்ளையடித்து மர்ம நபர்கள் தப்பி ஓட்டம்!!

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த பெத்தகல்லுபள்ளி பகுதியை சேர்ந்தவர் நடராஜன் மனைவி பவுனம்மாள் (வயது65). இவர் புத்துக்கோயில் சுங்கச்சாவடி அருகே உள்ள ஏரிக்கரையோரமாக கொட்டகை அமைத்து மாடுகளை மேய்த்து கொண்டு அங்கேயே நீண்ட நாட்களாக சட்ட விரோதமாக மது பாட்டில்கள் விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று இரவு புத்துக்கோயில் ஏரிக்கரை பகுதியில் மது பாட்டில்கள் விற்பனையில் ஈடுபட்டிருந்த பவுனம்மாள் என்பவரை

மர்ம நபர்கள் கழுத்தை நெரித்து, கல்லால் அடித்து கொடூரமாக கொலை செய்து பின்னர் அவர் அணிந்து இருந்த 4  சவரன் தங்க நகைகளை பறித்துக் கொண்டு தம்பியோடியுள்ளனர்.

தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளா தேவி மற்றும் அம்பலூர் காவல்துறையினர் பிரேதத்தை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து  மூதாட்டியை  கொலை செய்து விட்டு  நகைகளை பறித்துச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு. பாக்கியராஜ்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!