ஆற்காடு 16-வது வார்டில் கோலாகல ‘பெரும் பொங்கல்’ விழா – பொதுமக்கள் உற்சாகக் கொண்டாட்டம்!!

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு நகராட்சி 16-வது வார்டில், பொங்கல் திருநாளை முன்னிட்டு ‘பெரும் பொங்கல்’ விழா கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழா, அந்த வார்டின் கவுன்சிலரும் முன்னாள் நகரமன்ற துணைத் தலைவருமான பொன். ராஜசேகர் தலைமையில் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டது.

வார்டைச் சேர்ந்த பொதுமக்கள் குடும்பம் குடும்பமாகத் திரண்டு வந்து, மங்கல இசை முழங்கப் பானைகளில் பொங்கலிட்டு வழிபட்டனர். பொங்கல் பொங்கி வந்த தருணத்தில், அனைவரும் ஒருசேர “பொங்கலோ பொங்கல்” என முழக்கமிட்டு, இனிப்புகளைப் பகிர்ந்து தங்களின் மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர்.

தமிழர் பாரம்பரியத்தைப் போற்றும் விதமாக நடைபெற்ற இவ்விழா, மக்கள் மத்தியில் ஒற்றுமையும் உற்சாகமும் நிறைந்த சூழலை உருவாக்கியது. விழாவில் பெண்கள், இளைஞர்கள், குழந்தைகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பொங்கல் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.

ஆற்காடு செய்தியாளர் ஆனந்த்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!