சைபர் குற்றவாளிகளிடம் ரூ.14 கோடியை இழந்த முதிய தம்பதியினர்!டிஜிட்டல் அரெஸ்ட் செய்து ரூ.14 கோடி மோசடி!!
டெல்லியில் முதிய தம்பதியினரை ‘டிஜிட்டல் அரெஸ்ட்' செய்து மிரட்டி, ரூ.14 கோடியை பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சம்பந்தப்பட்டு உள்ளீர்கள் என கூறி பல நாட்களாக வீடியோ கால் மூலம் மோசடியாளர்கள் அவர்களை மிரட்டியுள்ளனர்.
பணத்தை அனுப்ப பயன்படுத்தப்பட்ட வங்கி கணக்குகளை முடக்கியுள்ள போலீசார், குற்றவாளிகளைத் தேடும் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக