தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற சிறப்பு குறை தீர்ப்புக் கூட்டம்! அரவிந்த் IPS பங்கேற்பு !!
தென்காசி மாவட்டம்,தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.S.அரவிந்த் அவர்களின் தலைமையில் பொதுமக்களுக்கான சிறப்பு குறை தீர்ப்பு கூட்டம் இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடம் புகார் மனுக்களை பெற்று அவர்களின் குறைகளை கேட்டறிந்து தீர்வு வழங்கப்பட்டது. மேலும் பொதுமக்களின் புகார்களை விரைந்து விசாரணை செய்திட சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
தென்காசி செய்தியாளர் ஜெயக்குமார்.

கருத்துகள்
கருத்துரையிடுக