தமிழக முதல்வர் தலைமையில், சென்னையில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் பங்கேற்க, மாற்றுத்திறனாளி நியமன உறுப்பினர்களை வழியனுப்பி வைத்த ஒன்றிய குழு தலைவர்.பெ. வடிவேலு!!

ராணிப்பேட்டை மாவட்டம்,சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு 3.12.2025 நாளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில், மாற்றுத் திறனாளிகள் தினவிழா நடைபெற உள்ளது. 

இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக, நெமிலி ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 47 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சீரிய முன்னெடுப்பில், ஒவ்வொரு ஊராட்சிக்கும் ஒரு மாற்றுத்திறனாளி நியமன உறுப்பினர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் நாளை சென்னையில் நடைபெற உள்ள, இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக, நெமிலி ஊராட்சி ஒன்றியத்தின் நியமன உறுப்பினர்கள் இன்று மாலை நெமிலி  ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலிருந்து, சென்னைக்கு பேருந்தில் புறப்பட்டு சென்றனர். அவர்களுக்கு உணவு வழங்கி, நெமிலி ஒன்றிய குழு தலைவர்.பெ. வடிவேலு அவர்கள் வழி அனுப்பி வைத்தார்.

இந்த நிகழ்வின் போது, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவகுமார் ஜெயஸ்ரீ மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் உடன் இருந்தனர்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!