தண்ணீர் டேங்க் மீது ஏறிய மனநலம் பாதிக்கப்பட்ட முதியவரை தீயணைப்பு துறையினருடன் பாதுகாப்பாக மீட்ட காவல்துறையினர்!!

இராணிப்பேட்டை மாவட்டம், பானாவரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காட்டுப்பாக்கம் அருந்ததி பாளையம் கிராமத்தைச் சேர்ந்த நரசிம்மன் (வ 70), த/பெ முனிசாமி, ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர், இவர் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில்  காட்டுப்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள தண்ணீர் டேங்க் மீது ஏறினார்.

தகவல் கிடைத்தவுடன், பானாவரம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, தீயணைப்புத் துறையினரின் உதவியுடன், முதியவரை எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாப்பாக கீழே இறக்கி மீட்டனர்.     

இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சார்பாக, அவசர சூழ்நிலைகளில் உடனடி தகவல் அளித்து ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!