தவெக நிர்வாகி ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை!!
கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை சந்தை பகுதியை சேர்ந்தவர் ஷெரின் (25). தவெக களியக்காவிளை பேரூராட்சி நிர்வாகியான இவர் நேற்று குழித்துறை ரயில்வே தடம் வழியாக சென்ற ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து நாகர்கோவில் ரயில்வே போலீசார் அவரது உடலை கைப்பற்றி வழக்குப் பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தென்காசி மாவட்ட செய்தியாளர் ஜெயக்குமார்.

கருத்துகள்
கருத்துரையிடுக