சமீப காலமாக மாண்புமிக்க நீதிமன்ற நீதிபதி உத்தரவை காற்றில் பறக்கவிடும் இந்து சமய அறநிலைத்துறை நிர்வாகம்!!
பல லட்சம் மக்கள் வந்து செல்லக்கூடிய குற்றாலம் குற்றாலநாதர் திருக்கோவில் வளாகம் முழுவதும் நடக்க முடியாத சூழல் அவலம்... ஒரு பிரதான திருக்கோவில் பாடல் பெற்ற திருத்தலம்.. அகிலத்தை ஆளக்கூடிய பரம்பொருள் சிவபெருமான் நடனம் ஆடிய திருத்தலத்திற்கு சொந்தமான திருக்கோவில் பல ஆயிரம் ஆண்டுகளைக் கடந்து நிற்கும் திருக்குற்றால நாதர் திருக்கோவில் திருக்குற்றால திருக்கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வருவது குதிரை கொம்பாக இருக்கிறது எங்கு பார்த்தாலும் நடைபாதை முழுவதும் தார்பாய்கள் கூடாரம் காணப்படுகிறது இரவு முழுவதும் சட்ட விரோதம் மதுபானம் விற்பனை திருக்கோயில் அறங்காவலர்கள் குழு தலைவர் பலமுறை சொல்லியும் கேட்காமல் கோவில் வாசல் பகுதியில் முழுவதும் ஆக்கிரமிக்கும் நாடோடி சமூகத்தினர் அன்னதானம் மண்டபத்தை சுற்றிலும் இயற்கை உபாதை கழிக்கும் இடமாக மாற்றி வருகின்றனர் கோவில் வளாகத்தை சுற்றி துர்நாற்றம் வீசுகிறது ஆயிரம் ஏக்கருக்கு சொந்தமான திருக்கோவில் தென்காசி மாவட்டத்திலேயே அதிக வருவாய் கொண்ட திருக்கோவில் யார் கவனிப்பது?

கருத்துகள்
கருத்துரையிடுக