முக்கூடல் பிரதான சாலையில் இரவு நேரங்களில் போக்குவரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் கால்நடைகள்!!
திருநெல்வேலி மாவட்டம், சேர்மகாதேவி வட்டம் தேர்வு நிலை பேரூராட்சி முக்கூடல் பிரதான சாலையில் இரவு நேரங்களில் கால்நடைகள் சாலையின் நடுவே நிற்பதால் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்வோர் அந்த வழியாக மிகுந்த சிரமத்துடன் சாலையை கடந்து செல்கின்றனர்.
அவசர ஊர்தி கூட செல்ல முடியாத அளவிற்கு சாலை நடுவே கால்நடைகள் இரவு நேரங்களில் நிற்பதால் சாலையில இருசக்கர வாகனத்தில் வருவோர்கள் விபத்தை சந்திக்கும் அபாயம் உள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தென்காசி மாவட்ட செய்தியாளர் ஜெயக்குமார்.

கருத்துகள்
கருத்துரையிடுக