பொது அமைதியை நிலைநாட்டுவதே அரசின் முக்கியப் பணி! தீபம் எங்கே ஏற்ற வேண்டும் என்பதை கோவில் நிர்வாகம்தான் முடிவு செய்ய முடியும் அரசுத் தரப்பு வாதம்!!
தர்கா அருகில் உள்ளது தீபத்தூண் என்பதற்கான எந்த ஆவணங்களையும் மனுதாரர்கள் தாக்கல் செய்யவில்லை எந்த ஆவணங்களையும் தாக்கல் செய்யாத நிலையில், எப்படி தீபத்தூண் என முடிவு செய்யப்பட்டது? தனி நீதிபதி சுவாமிநாதனின் உத்தரவுகளில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டி அரசுத் தரப்பு வாதங்களை முன்வைக்கிறது. இந்த வழக்கு முழுவதும் ஒரு புதிய பழக்கத்தை கொண்டு வருவதற்காக தொடரப்பட்டது.
கோயில் சொத்துகள் தொடர்பாக இவ்வழக்கில் தனி நீதிபதி பேசுகிறார்; ஆனால், வழக்கு கோயில் சொத்துகள் தொடர்பானது அல்ல ராமஜென்ம பூமி வழக்கின் நிலையை தனி நீதிபதி மேற்கோள் காட்டியுள்ளார். அது இவ்வழக்கில் பின்பற்றப்பட்டால், இந்த விவகாரம் தொடர்பாக மனுதாரர் உரிமையியல் நீதிமன்றத்தையே நாட உத்தரவிட்டிருக்க வேண்டும்- அரசுத்தரப்பு வாதம்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக