நாட்டாகுடி கிராமத்தில் மீண்டும் குடியேற தொடங்கிய மக்கள்!!
சிவகங்கை மாவட்டம்,சிவகங்கையில் ஒருவர் மட்டுமே வாழும் கிராமம் என சமீபத்தில் பரபரப்பு ஏற்படுத்திய நாட்டாகுடி கிராமத்தில் மீண்டும் மக்கள் குடியேறத் தொடங்கியுள்ளனர்.
மாவட்ட நிர்வாகமும் தன்னார்வலர்களும் இணைத்து கிராம சூழலை மாற்றி அமைத்து விவசாயத்தையும் மீட்டெடுத்து வருகிறார்கள்.
சுமார் 70 குடும்பங்களை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் அந்த கிராமத்தில் வசித்து வந்தனர், 120 ஏக்கருக்கு மேல் விளைநிலங்களுடன் வானம் பார்த்த பூமியான நாட்டாகுடியில் வறட்சி, கால்நடைகள் தொல்லை, விளை பொருட்களுக்கு விலை கிடைக்காதது போன்ற காரணங்களால் பலரும் விவசாயத்தை கைவிட்டு, கிராமத்தை விட்டு வெளியேற தொடங்கினர்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.


கருத்துகள்
கருத்துரையிடுக