நத்தத்தில் நடைபெற்ற அனுமன் ஜெயந்தி விழா!!
திண்டுக்கல் மாவட்டம்,நத்தம் கோவில்பட்டியில் உள்ள வீர ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி கொண்டாடப்பட்டது. இதையொட்டி அங்கு யாகசாலை பூஜை அமைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து அங்குள்ள அனுமன் சிலைக்கு வடை, துளசி, வெற்றிலை, எலுமிச்சம் பழங்களால் ஆன மாலைகளைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டு வழிபாடு நடந்தது. இதில் முன்னதாக ராம நாம பூஜைகளும், 16 வகையான அபிஷேகங்களும், தீபாராதனைகளும் பூஜைகளும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அனுமனை தரிசனம் செய்து வழிபட்டனர். தொடர்ந்து அன்ன தானம் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் நத்தம் மதுரை வீரன்.

கருத்துகள்
கருத்துரையிடுக