சென்னையில் செவிலியர்கள் கைது நடவடிக்கையை கண்டித்து வாலாஜா மருத்துவமனையில் செவிலியர்கள் காத்திருப்பு போராட்டம்!!
ராணிப்பேட்டை மாவட்டம் தொகுப்பு புதிய செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் செவிலியர்கள் நடத்திய போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டு இருக்கும் சம்பவத்தை கண்டித்தும் செவிலியர்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி வாலாஜா அரசு தலைமை மருத்துவமனையில் செவிலியர்கள் பணி புறக்கணிப்பு செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்டம் முழுவதும் மருத்துவமனைகளில் செவிலியர்கள் இன்றி மருத்துவ பயனாளிகள் பாதிப்பு.
ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்

கருத்துகள்
கருத்துரையிடுக