தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற வருடாந்திர ஆய்வு !!
தென்காசி மாவட்டம்,தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் இயங்கி வரும் தனிப்பிரிவு அலுவலகம், முகாம் அலுவலகம் , மாவட்ட குற்ற ஆவன காப்பாகம், மாவட்ட குற்றப்பிரிவு , SJ&HR, ACTU ஆகியவற்றில் பராமரிக்கப்பட்டு வரும் கோப்புகள் மற்றும் பதிவேடுகளை திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் திரு.சந்தோஷ் ஹாதிமணி இ.கா.ப., அவர்கள் (பொறுப்பு திருநெல்வேலி சரகம்) வருடாந்திர ஆய்வினை மேற்கொண்டு காவல்துறையினருக்கு அறிவுரைகளை வழங்கினார், பின்னர் அனைத்து கோப்புகளையும் சரிவர முறையாக பராமரித்து வந்த காவல்துறையினருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர். S.அரவிந்த் அவர்கள் உடனிருந்தார்.
தென்காசி மாவட்ட செய்தியாளர் ஜெயக்குமார்.

கருத்துகள்
கருத்துரையிடுக