ப்ளூ பேர்ட்- 6 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது!!
பாகுபலி LVM3 ராக்கெட், அமெரிக்காவின் கனமான ப்ளூ பேர்ட் 6 (BlueBird-6) செயற்கைக்கோளை, டிசம்பர் 24, 2025இன்று ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவியது; இந்த ராக்கெட், பூமியிலிருந்து சுமார் 520 கிமீ உயரத்தில், நேரடியாக மொபைல் போன்களுக்கு 4G/5G இணைய சேவை வழங்கும் உலகின் மிகப்பெரிய செயற்கைக்கோளை நிலைநிறுத்தியது. இது LVM3-ன் 6வது செயல்பாட்டுப் பயணம், மற்றும் இந்தியாவின் ராக்கெட் மூலம் ஏவப்பட்ட மிகப்பெரிய வணிக செயற்கைக்கோள் இதுவே.
ஏவப்பட்ட இடம் சதீஷ் தவான் விண்வெளி மையம், ஸ்ரீஹரிகோட்டா.
செயற்கைக்கோள்: ப்ளூ பேர்ட்-6 (BlueBird-6) (AST SpaceMobile நிறுவனத்திற்குச் சொந்தமானது.இந்தியாவின் ஏவுதளத்திலிருந்து ஏவப்பட்ட கனமான வணிக செயற்கைக்கோள் இதுதான்; சுமார் 520 கிமீ உயரத்தில் நிலைநிறுத்தப்பட்டது.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.



கருத்துகள்
கருத்துரையிடுக