ஆற்காடு- மக்கள் தேசம் கட்சி சார்பில் புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கரின் 69ஆவது நினைவு தினம் அனுசரிப்பு!!
இராணிப்பேட்டை மேற்கு மாவட்டம் ஆற்காட்டில் மக்கள் தேசம் கட்சி சார்பில் புரட்சியாளர் அம்பேத்கரின் 69 ஆவது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்விற்கு மாவட்ட செயலாளர் ஏ.ஜி.குட்டி என்கிற வசந்தகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்பாளர் எம். சாந்தகுமார் முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட வர்த்தக அணி துணை செயலாளர் எ. ராஜா,மகளிர் அணி எ.ரதி, நகர செயலாளர் பி. சஞ்சய், நகர தலைவர் வெங்கட், ஆற்காடு ஒன்றிய செயலாளர் பாபு உள்ளிட்டோர் கலந்துகொண்டு அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து புகழஞ்சலி செலுத்தினர்.
ஆற்காடு செய்தியாளர் ஆனந்த்

கருத்துகள்
கருத்துரையிடுக