தேனி மாவட்ட நிர்வாகம் சார்பில் 4 ஆம் ஆண்டு புத்தகத் திருவிழாவை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்!!
தேனி மாவட்டம்,தேனி நாடார் சரஸ்வதி மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் புத்தகத் திருவிழா! இன்று மாலை துவங்கியது சுமார் 80 க்கும் மேற்பட்ட புத்தக அரங்குகள் அரசுத் திட்டங்களின் ஸ்டால்கள் மற்றும் பல்வேறு வகை உணவு ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன தினமும் பள்ளி கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் பேச்சாளர்கள், எழுத்தாளர்கள், பங்கேற்கும் இலக்கிய கருத்தரங்கங்கள் மற்றும் பட்டிமன்றங்கள் நடக்க இருக்கின்றது இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர். ரஞ்ஜீத்சிங் இ. ஆ. ப, டி.ஆர்.ஒ. ராஜ்குமார், கலால் உதவி ஆணையர்,பஞ்சாபகேசன் ஆட்சியரின் நேர்முக உதவியாளர், முகமது அலி ஜின்னா தேனி மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர்,முத்துக்குமார் நகர் நல அலுவலர். கவிப்பிரியா மற்றும் அதிகாரிகள் பொதுமக்கள் ஆகியோர் புத்தக திருவிழாவில் கலந்துகொண்டனர் ஏராளமான பள்ளி மாணவர்களும், பொதுமக்களும் விழாவில் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான புத்தகங்களை வாங்கி சென்றனர்.
தேனி மாவட்ட செய்தியாளர் ராஜா.

கருத்துகள்
கருத்துரையிடுக