நத்தத்தில் எம்ஜிஆரின் 38ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு எம்ஜிஆர் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை!!
திண்டுக்கல் மாவட்டம்,நத்தம் பேருந்து நிலையம் அருகில் அதிமுக சார்பாக மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் நினைவு நாள் கடைபிடிக்கபட்டது. இதற்கு மாநில ஜெயலலிதா பேரவை இணை செயலர் கண்ணன் தலைமை தாங்கி அவரது படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.இதில் அதிமுக ஒன்றிய செயலர் மணிகண்டன், மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலர் ஜெயபாலன்,நகர அவைத்தலைவர் சேக்ஒலி உள்ளிட்ட பேரூராட்சி கவுன்சிலர்கள்,ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் நத்தம் மதுரை வீரன்.

கருத்துகள்
கருத்துரையிடுக